ரணிலின் கைதுக்கு காரணமான பிரித்தானிய விஜயம்! அழைப்பு விடுத்தவர் மரணம்
மைத்ரி விக்ரமசிங்கவின் முனைவர் பட்டம் வழங்கும் விழாவிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரித்தானியாவுக்கு அழைத்த வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சோராஜ் பால் காலமாகியுள்ளார்.
குறித்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றிய அவர் நேற்று(22) தனது 94 வயதில் காலமாகியுள்ளார்.
பயணத்தால் வந்த சர்ச்சை
இது இவ்வாறிருக்க, பேராசிரியர் சோராஜ் பாலின் அழைப்பின் பேரில் பிரித்தானியா சென்ற காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணிலின் குறித்த பிரித்தானிய பயணமானது, தனிப்பட்ட பயணம் என்றும் அதற்கு அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் ரணில்
இது தொடர்பில் வாக்குமூலம் வழங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் சென்ற நிலையில், நேற்று கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
அதனை தொடர்ந்து, அவரின் நிலைமை மேலும் மோசமடைந்ததன் காரணமாக அவரை கொழும்பு தேசிய வைத்தியாசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்