அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்
Kilinochchi
SL Protest
Sri Lanka Government
By Independent Writer
Courtesy: siva
அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு எதிராக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி - பழைய கச்சேரி முன்பாக இன்றைய தினம் (31) காலை 9 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பமானது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான சட்ட வரைபு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மகஜர்கள் கையளிப்பு
இதன்போது அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் பதிவுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்ட ஏற்பாடுகளுக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

போராட்டத்தின் நிறைவில் வடக்கு மாகாண ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர், கடற்றொழில் அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருக்கான தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை ஒடுக்குகிறதா அரசு? 22 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்