யோஷித - டெய்ஸி ஃபாரஸ்ட் மீதான பணச்சலவை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையானது, ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி வழக்கனது எதிர்வரும் 2026 செப்டம்பர் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (31.08.2026) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
உயர் நீதிமன்ற விசாரணை
இந்த வழக்கு தொடர்பான விடயம் குறித்து பிரதிவாதி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், அந்த மேல்முறையீடு செப்டம்பர் 04 ஆம் திகதி விசாரணைக்கு வரவிருப்பதாகவும் அரசுத் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

அதன்படி, உயர் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு ஒரு திகதியில் வழக்கை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு கோரியது.
இதன்படி சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த நீதிபதி, இவ்வழக்கை செப்டம்பர் 28 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் ஏறத்தாழ 57 மில்லியன் ரூபாயை மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்ததன் மூலம், பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாக யோஷிதா மற்றும் டெய்சி ஃபாரஸ்ட் மீது சட்டமா அதிபர் வழக்குப் பதிவு செய்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல் - பின்னணியில் அரசியல் அழுத்தம்.! NPP உறுப்பினருக்கு உடனடி பிணை
EPDP இன் பங்காளிகளான சுமந்திரன் தரப்பிற்கு தமிழ் தாய்மார்களுடைய கண்ணீர் பயணத்தில் கரம் கொடுக்க மனம் வராதுதான்
அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி! அஜித் பி பெரேரா பகிரங்க குற்றச்சாட்டு