பறாளாய் விநாயகர் ஆலயம் தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக யாழில் போராட்டம்!
Jaffna
University of Jaffna
SL Protest
By Sathangani
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (05) சுழிபுரத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பறாளாய் முருகன் ஆலயத்தை நோக்கி பேரணி பயணிக்கின்றது.
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் என தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக

போராட்டத்தின் போது தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், பதாகைகளையும் போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
இப்போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், மத குருமார்கள், சைவ அமைப்புக்கள், சிவில் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி