இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாம் என தமிழர்கள் போராட்டம் (காணொளி)
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் இராணுவ முகாம்களை அகற்றுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
இன்று (01) கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள 55ஆவது படை முகாமுக்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இராணுவத்தினரின் உதவி

இதன்போது அவர்கள் தெரிவிக்கையில், தமது பகுதியில் அனைத்து விடயங்களிலும் இராணுவம் ஒத்தாசை புரிவதாகவும், தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சியான நிலைமையிலும் தங்களுக்கான குடிநீர் விநியோகத்தினை இராணுவத்தினரே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
தமது பகுதிகளில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வாயினும் இராணுவத்தினரின் உதவியே முதல் கிடைக்கப்பெறுவதாகவும் தமது பகுதிகளில் நடைபெறும் மரண நிகழ்வுகளில் கூட இராணுவத்தின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளதாகவும் அத்துடன் தமது பகுதிகளில் சட்ட விரோத செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக இதனை கட்டுப்படுத்துவதில் இராணுவத்தினரே முன் நிற்பதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் இவ்விடயம் தொடர்பாக அக்கராயன் காவல்துறையினருக்கு பலமுறை தெரிவித்தாலும் அவர்கள் சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் எனவே இப்பகுதியில் உள்ள இராணுவ முகாமினை அகற்ற வேண்டாம் என வலியுறுத்தி கவனயீர்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.


செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 19 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்