இலங்கையில் அடுத்த வாரம் திடீர் கிளர்ச்சி..!
சிறிலங்காவின் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ச தனது அதிகார மையத்திற்கு எதிரான மக்கள் கிளர்ச்சியால் அதாவது அரகலய எனப்படும் போராட்டங்களால் நாட்டை விட்டு தப்பியோடிய ஒரு வருட நிறைவு நாள் அடுத்த வாரம் வர இருக்கிறது.
இந்தப் பின்னணியில் நாட்டில் மீண்டும் கிளர்ச்சியை உருவாக்கி, நாட்டை முடக்க திட்டங்கள் போடப்படுவதாக சிறிலங்காவின் புலனாய்வு திணைக்களத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேட ஆலோசனைகள்

இவ்வாறான கிளர்ச்சிகளை நடத்துவது தொடர்பான கூட்டம் ஒன்று, கடந்த வாரம் கண்டி அல்கடுவ பிரதேசத்தில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் நடத்தப்பட்டதாகவும் உத்தேச கிளர்ச்சியின் போது சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல் துறையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விசேட ஆலோசனைகள் அந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்டதாகவும் சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறிக் கொள்கிறார்.
இவ்வாறு தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கலை விழா ஒன்றுக்காக கொள்வனவுக் கட்டளைகள் வழங்கப்பட்ட ஆயிரம் உணவுப்பொதிகளை கிளர்ச்சிக்காரர்களுக்குரிய உணவுப் பொதிகளென கருதிய அரசாங்கம் திடீரென சகட்டுமேனிக்கு கலவரப்பட்டு, அச்சமடைந்து பாதுகாப்பு கெடுபிடிகளை செய்து இறுதியில் அந்த உணவுப்பொதிகள் நாறிய அனுபவங்களும் இருக்கின்றன.
இந்த நிலையில், இப்போது ஜூலை கிளர்ச்சிக்கு கண்டியில் ஒத்திகை என்ற புதிய புரளிகள் கிளப்பப்படுவதாக தெரிகின்றது.
எனினும் அடுத்த வாரத்தில் கோட்டாபய ராஜபக்ச ஆட்சி அதிகாரத்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட ஒரு வருட நிறைவின்போது போராட்டங்கள் இடம்பெறக்கூடும் என்பதையும் மறுத்துக் கொள்ள முடியாது.
இதே போல நாட்டை முடக்குவதற்காக பல்வேறு குழுக்கள் எதிர்வரும் காலத்தில் நாடளாவிய பணி புறக்கணிப்பு போராட்டங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கைகள் மூலம் தமக்குத் தெரிய வருவதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 4 மணி நேரம் முன்