அநுரவுக்கு எதிராக போராட்டம் : காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) வருகையை முன்னிட்டு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு தடையுத்தரவு கோரிய வவுனியா காவல்துறையினரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸ்நாயக்கா நாளை (27.04.2025) மாலை 4 மணிக்கு வவுனியா (Vavuniya) நகரசபை மைதானத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் அங்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தரவுள்ளனர்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
ஜனநாயக உரிமை
அவ்வாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றால் அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனவும் தெரிவித்து காவல்துறையினர் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு கோரியிருந்தனர்.
இதனை கவனத்தில் எடுத்த மன்று, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வது மக்களின் ஜனநாயக உரிமை அதனை தடுக்க முடியாது.
ஆனால் அமைதிக்கும் பங்கம் ஏற்படும் வகையில் யாராவது செயற்பட்டால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்து தடையுத்தரவு கோரிக்கையை மன்று நிராகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
