தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் - சுகாதார தொழிற்சங்கங்கள் உறுதியான பதில்
எமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும்வரை பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதை தவிர தமக்கு வேறு மாற்றுவழி இல்லை சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணை அமைப்பாளர் சமன் ரத்னப்பிரய தெரிவித்தார்.
தாதியர், உதவி வைத்திய சேவையாளர்கள் உட்பட 18 தொழிற்சங்கங்கள் நேற்று முன்னெடுத்த பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சரோ சுகாதார அமைச்சோ தயாராக இல்லை.
ஆனால் இவர்கள் வேறு பிரச்சினைகள் உருவாக்கி, தொழிற்சங்க போராட்டங்களுக்கு தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
சுகாதார ஊழியர்களின் 7 கோரிக்கைகளில் 4 கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றி இருப்பதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துவரும் கருத்தில் எந்த உண்மையும் இல்லை” எனக் கூறியுள்ளார்.