மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
மாகாண சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தரப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 3 அல்லது 4 வருடங்களுக்கு தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பில்லை என தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தாக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன
இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவரை ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு வினவிய போதே தேர்தல்கள் ஆணைக்குழு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.
தேர்தலை நடத்துவதற்கான அழுத்தம்
அவர் மேலும் தெரிவிக்கையில், எனினும் சட்டச் சிக்கல்கள் தடையாக உள்ள நிலையில் அதனை நாடாளுமன்றத்தினூடாக நிவர்த்திப்பதாக அரசாங்கமும் உறுதியளித்துள்ளது.
இந்த சுழ்நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறித்த கருத்தை வெளியிட்டிருப்பார் என தாம் நம்பவில்லை என அந்த உயரதிகாரி குறிப்பிட்டார்.
அத்துடன், ஆணைக்குழுவின் தலைவரை இது தொடர்பில் நேற்றுக் காலை தொடர்பு கொண்டு கேட்ட போது தாம் தேர்தல்கள் நடத்தப்படாது என்ற கருத்தை வெளியிடவில்லை என்றும் தவறாக பகிரப்படும் இந்த செய்திக்கு மறுப்பைத் தாம் ஊடகங்களுக்கு வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக குறித்த உயரதிகாரி கூறினார்.
தேர்தல்கள் ஆணைக்குழு என்ற வகையில் தாம் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தத்தை தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
