காணாமல்போன இளைஞன் : பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை
காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிப்பதில் பொதுமக்களின் உதவியை கோரி காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த இளைஞன் கடந்த 17 ஆம் திகதி காணாமல் போனதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக அவரது தந்தை களுத்துறை தெற்கு காவல் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் படி, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அடையாளங்கள்
காணாமல் போன இளைஞர், தெனிபிட்டிய, எலுவாவல, மகாதெனிய பகுதியை சேர்ந்த 29 வயதான பொல்வத்த கொல்லகே நவோத் கிம்ஹான் என்பவர் என தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் சுமார் 5 அடி 5 அங்குல உயரம், மெலிந்த உடல் அமைப்பு, குட்டையான முடி மற்றும் தாடி கொண்டவர் என்று அடையாளங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறித்த இளைஞன் தொடர்பில், ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
- தலைமையக காவல்துறை பரிசோதகர், காவல் நிலையம் களுத்துறை தெற்கு :- 071-8591691
- குற்றப் புலனாய்வுப் பிரிவு, காவல் நிலையம் களுத்துறை தெற்கு:- 071 - 8594360
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |