நாமலுக்கு பொதுபாதுகாப்பு அமைச்சரின் பதிலடி
Namal Rajapaksa
Ananda Wijepala
By Sumithiran
கெஹல்பத்தர பத்மே மற்றும் பிற பாதாள உலக நபர்களுடன் தொடர்பு இருந்திருந்தால், நாமல் ராஜபக்சவின் மனசாட்சி அதை நன்கு அறிந்திருக்கும் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
"எதிர்காலத்தில் அந்த பாதாள உலக நபர்களுடன் சேர அரசாங்கம் எங்களை அனுமதிக்கலாம்" என்ற நாமல் ராஜபக்சவின் கூற்று தொடர்பான கேள்வியின் போது அவர் இவ்வாறு கூறினார்.
வதந்திகளின் அடிப்படையில் காவல்துறை செயல்படாது
இலங்கை காவல்துறை சாதாரண வதந்திகளின் அடிப்படையில் செயல்படாது என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
விசாரணைகள் மூலம் தகவல் வெளிப்படும் முன் அவர் அத்தகைய அறிக்கையை வெளியிடுவது கேள்விக்குறியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி