அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு : அதிகரிக்கப்போகும் சம்பளம்
அனைத்து அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முடிவு செய்துள்ளார், மேலும் சம்பள உயர்வு அடுத்த ஜனவரியில் செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கதெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை(SLTB) டிப்போக்களில் அதிகமாக வேலை செய்பவர்களுக்கு அதிக ஊதியம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இலங்கை போக்குவரத்து சபை மக்களுக்கு முழுமையாக சேவை செய்யும் நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
சீட் பெல்ட் அணிவது கட்டாயம்
2026 ஜனவரி (01) முதல், நீண்ட தூர பயணங்களில் ஈடுபடும் வழக்கமான பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
25 பேருந்து நிலையங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
