பூநகரி கிராமிய பாடசாலையில் வரலாற்று சாதனை படைத்த மாணவி!
Kilinochchi
G.C.E. (O/L) Examination
Education
By Kathirpriya
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி கிராமப்புரத்தில் அமைந்துள்ள சிறிய பாடசாலையான செல்லியாதீவு அ. த. க பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக 9A தர சித்தி பெறப்பட்டுள்ளது.
1967 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பாடசாலையில், இதுவே முதலாவது வரலாற்றுச் சாதனையாகும்,
வரலாற்றுச் சாதனை
2022 சாதாரணப் பரீட்சையில் தோற்றிய சதீசன் சரண்யா என்ற மாணவி சகல பாடங்களிலும் 9A தர சித்தி பெற்று பாடசாலையில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
பின்தங்கிய கிராமப்புறத்தில் வசித்து வரும் இந்த மாணவியின் வரலாற்றுச் சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி