கட்டாரில் கொல்லப்பட்டவர் இலங்கையரா? வேலை வாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு!
கட்டார் நாட்டின் தோஹாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த நபர், இலங்கையை சேர்ந்த தொழிலாளி அல்ல என உறுதியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சில ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து துறைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் பிரியங்கர பெரேரா விசேட கவனத்தை செலுத்தியுள்ளதுடன் இது தொடர்பாக உடனடியாக தேடி அறியுமாறு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் பிரிவு அறிவித்துள்ளார்.
இதற்கமைய கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் பிரிவின் பிரதானி கீர்த்தி முத்துகுமாரண, சம்பவம் நடத்த பிரதேசத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்துள்ளார்.
சம்பவத்தில் இறந்தவர் இலங்கையர் அல்ல என்பது காவல்துறையினர் வழங்கிய தகவல் மூலம் உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து பிரதேச வைத்தியசாலையில் ஆய்வு நடத்தப்பட்டதுடன் அங்கிருந்த உடல், இலங்கையை சேர்ந்தவருடையது அல்ல என்பது உறுதியாகியுள்ளது.