உர விநியோகத்திற்கும் QR முறைமை
QR முறைமை மூலம் உரங்களை வழங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்தார்.
உரங்களை வழங்கும்போது QR முறையைப் பின்பற்றுவது அவசியம் என்றும் அமைச்சர் கூறினார்.உரங்களை வழங்குவதற்கு QR முறையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டில் போதுமான அளவு உரங்கள் உள்ளன
உரங்கள் தொடர்பாக தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், நாட்டில் போதுமான அளவு உரங்கள் உள்ளன என்றும் அமைச்சர் கூறினார். இருப்பினும், கறுப்புச் சந்தைகளும் சில தனியார் நிறுவனங்களும் முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட உரங்களின் விலையை அதிகரித்துள்ளதாகவும், தற்போது ஒரு உர மூட்டை ரூ. 12,000-13,000 விலையில் விற்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நியாயமற்ற முறையில் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், நுகர்வோர் விவகார ஆணையமும் இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்றும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
உரப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்
இருப்பினும், உரப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று லால் காந்தா கூறினார். இந்த பருவத்தில் பெரிய உரப் பிரச்சினை இருக்காது என்றும், அடுத்த மே மாதத்தில் சீனாவிலிருந்து உரக் கையிருப்பை வாங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

எதிர்கால உர விநியோகம் குறித்து கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் லால் காந்த இவ்வாறு தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |