மகாராணி எலிசபெத்தின் இறப்பிற்க்கான காரணம் என்ன..! வெளியான இறப்பு சான்றிதழ் (சான்றிதழ் இணைப்பு)
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறப்பு சான்றிதழ் வெளியாகியுள்ளது.
70 ஆண்டுகாலமாக பிரித்தானியாவின் மகாராணியாகவிருந்த இரண்டாம் எலிசபத் கடந்த மாதம் 8 ஆம் திகதி தமது 96 வயதில் காலமனார்.
26 வயதில் மகாராணியாக மகுடம்
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டபோது, 1952ஆம் ஆண்டு இவர் பிரித்தானிய மகாராணியாக மகுடம் சூடினார்.
26 வயதில் பிரித்தானியாவின் மகாராணியாக மகுடம் சூடிய இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
ஸ்கொட்லாந்தில் உள்ள பெல்மொரல் மாளிகையில் மருத்துவ கண்காணிப்பில் இருந்த நிலையில் இரண்டாம் எலிசபத் காலமானார்.
கடந்த மாதம் 19 ஆம் திகதி உலகத் தலைவர்களின் பங்குபற்றலுடன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்குகள் இடம்பெற்று பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது.
இறப்பிற்க்கான காரணம்
இந்நிலையில், தற்பொழுது மகாராணியின் இறப்பு சான்றிதழ் வெளியாகியுள்ளது.
இதன்படி, ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்ததாக அவரது இறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தின் நேஷனல் ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஆவணம், மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத், 2022 செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி பிற்பகல் 3:10 மணிக்கு இறந்ததாக இறப்பு சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணி, ஸ்கொட்லாந்தில் உள்ள பாலேட்டரில் உள்ள பெல்மொரல் மாளிகையில் உயிரிழந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணத்தில் ராணியின் மகள் இளவரசி அன்னே கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.