வடக்கு - தெற்கில் தலைதூக்கும் இனவாதம்: மனந்திறந்தார் ஜனாதிபதி அநுர
அதிகாரத்திற்காக வடக்கு மற்றும் தெற்கில் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
16வது தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வில் இன்று உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், போர் இயற்கையானது அல்ல என்றும் சிலருக்கு அதிகாரத்தைப் பெறுவதற்கும், பாதுகாப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் ஒரு பேரழிவு
இதேவேளை, சிலரின் அதிகார போராட்டங்களுக்காக தீவிரவாதத்தையோ இனவாதத்தையோ தூண்டாத பெற்றோரின் குழந்தைகள் சிலரின் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், போர் ஒரு பேரழிவு மற்றும் அழிவு என்று கூறிய ஜனாதிபதி, இனிமேலும் எந்தவொரு போரும் எழுவதைத் தடுப்பதே அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, அமைதிக்காக அனைவரும் உறுதியான உறுதிபாட்டுடன் செயல்பட வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
