கோட்டாபயவை பின்தொடரும் அநுர : கடுமையாக சாடும் இராதாகிருஷ்ணன்

Anura Kumara Dissanayaka Sri Lankan political crisis Political Development Current Political Scenario
By Shalini Balachandran Oct 24, 2024 12:45 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), இனவாதத்தைப்பற்றி பேசி மக்கள் மத்தியில் எவ்வாறு வாக்கு சேகரித்தாரோ அதுபோல தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் (Anura Kumara Dissanayake) மக்கள் மத்தியில் இனவாதத்தை பற்றி பேசியே வாக்கு சேகரிக்கின்றார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் (V.Radhakrishnan) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நானு ஒயா பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இரண்டு தேர்தலிலும் முக்கிய பங்கை வகித்தது இந்த ஈஸ்டர் தாக்குதல். அந்த ஈஸ்டர் தாக்குதல் பிரச்சினையை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத அமைச்சர்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத அமைச்சர்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தற்போதய ஜனாதிபதி

தற்போது நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள் அனைவரும் ஈஸ்டர் தாக்குதலோடு தொடர்புடையவர்கள் என கம்மன்பில அறிவித்திருந்தார். தற்போது இது ஒரு புதுக் கதையாக இருக்கிறது இரண்டு தேர்தலிலும் இந்த இரண்டு ஜனாதிபதிகளும் இதனை பயன்படுத்தியே வந்துள்ளனர்.

கோட்டாபயவை பின்தொடரும் அநுர : கடுமையாக சாடும் இராதாகிருஷ்ணன் | Radhakrishnan Strongly Accused Anura

நாம் தற்போதய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முழுபலத்தையும் வழங்கினால் அவர் நினைத்ததை வைத்து செயல்படுவார். ஆகவே ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இந்த நாட்டின் பிரதமராக வருவதற்கு செயற்பட வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் மக்கள் மத்தியில் சொன்னவற்றை எதையும் செய்ததில்லை. 48 மணித்தியாலங்களில் திருடர்களை கைது செய்வதாக கூறினார்கள் தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாக கூறினார்கள் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை அநுரவிற்கே தெரியாது அவர் ஜனாதிபதியாக வருவார் என்று.

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் நீரிழிவு நோயாளர்கள்

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் நீரிழிவு நோயாளர்கள்

அரிசிக்கு தட்டுபாடு 

இன்று அரிசிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபா என கூறியவர்கள் இன்று 1350 ரூபாவில் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

கோட்டாபயவை பின்தொடரும் அநுர : கடுமையாக சாடும் இராதாகிருஷ்ணன் | Radhakrishnan Strongly Accused Anura

பொருட்களின் விலை அதிகரித்துள்ளது தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் தீபாவளி முற்பணம் எவ்வளவு என்பதனை பெருந்தோட்ட நிறுவனங்கள் இதுவரை அறிவிக்கவில்லை.

ஒருகாலத்தில் EPF பணத்தை யானை விழுங்கிவிட்டதாக கடந்த அரசாங்கத்தில் ரணிலுக்கு ஆதரவு வங்கியபோது கூறியவர்கள் மீண்டும் அந்த யானையை கொண்டு வந்துள்ளார்கள். ஆகவே நாம் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

பத்து வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் விதிக்கப்பட்டது மரண தண்டனை

பத்து வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் விதிக்கப்பட்டது மரண தண்டனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021