ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை! காலநிலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
சாதாரண தரப் பரீட்சை காலத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆபத்தாக காணப்படும் பாடசாலைகள் தொடர்பில் அந்த பகுதிகளில் உள்ள வலய மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
அதன்படி, மோசமான காலநிலைகளின் போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி பாடசாலைகள் செயல்பட வேண்டும் என அமைப்பின் மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை இடங்கள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் வீதிகளை பயன்படுத்தும் போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பரீட்சை ஆரம்பம்
இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி 17 முதல் பெப்ரவரி 26 வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், நாளை (15) முதல் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் இது தொடர்பாக வெளியிடப்படும் அறிவிப்புகள் குறித்து கவனம் செலுத்துமாறு திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
கொழும்பில் பயங்கரம்: வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி - களத்தில் குதிக்கும் CID
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |