தோட்ட தொழிலாளர்களின் சம்பளம்: சர்ச்சையில் சிக்கிய வர்த்தமானி
தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவை பிறப்பிக்காத மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தோட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இந்த மாதம் 27ஆம் திகதி குறித்த மனு பரிசீலிக்கப்படவுள்ளது.
அகரபதன பெருந்தோட்ட நிறுவனம் உட்பட 21 நிறுவனங்களால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மனு தாக்கல்
அதன்போது, வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதுடன், அதனை விசாரணை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கக் கோரி பெருந்தோட்டட நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)