மீண்டும் ராஜபக்ச குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டு வர முயற்சி....! மறுக்கும் இரா. சாணக்கியன் எம்.பி
மீண்டும் ராஜபக்ச குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டு வரவோ, ரணில் விக்ரமசிங்கவை ஆட்சிக்குக் கொண்டு வரவோ எமக்குத் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (Shanakiyan Rasamanickam,) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சீலாமுனைப் பகுதியில் மாநகரசபை உறுப்பினர் நடராசா சுதர்ஷன் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில், மாநகரசபையின் பிரதி முதல்வர் டினேஸ் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
எமது ஒரே கோரிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், உகண்டாவில் ராஜபக்ச குடும்பத்தினர் கொள்ளையடித்த 18 பில்லியன் டொலர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அவற்றில் ஒரு பகுதியை இந்நாட்டுக்குக் கொண்டு வந்தாலே பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விரட்டியடித்து மீண்டும் ராஜபக்ச குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டு வரவோ, ரணில் விக்ரமசிங்கவை ஆட்சிக்குக் கொண்டுவரவோ எமக்குத் தேவையில்லை.
எமது கோரிக்கை மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதே. இதுவே எமது ஒரே கோரிக்கை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
[]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்