அரச நிவாரண நிதி தொடர்பில் வடக்கில் தொடரும் முறைப்பாடுகள்: றஜீவன் எம்.பி விளக்கம்!

Jaffna Anura Kumara Dissanayaka Sri Lanka NPP Government
By Kanooshiya Dec 12, 2025 06:59 AM GMT
Report

அரசியல் பேதங்களை கடந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சலுகை வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி நினைப்பதாகவும், அதனை எல்லோரும் உணர்ந்து ஒரே கோட்டில் பயணம் செய்வதன் மூலமே நாட்டையும் மக்களையும் மீட்க முடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்தார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே றஜீவன் எம்.பி இதனை தெரிவித்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற வெள்ள அனர்த்தம் சம்பந்தமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து பல்வேறு முறைப்பாடுகள் எமக்கு கிடைத்து வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

வெள்ளத்தில் பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி - திடீரென உயிரிழப்பு

வெள்ளத்தில் பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி - திடீரென உயிரிழப்பு

யாழ் மாவட்டம்

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “ யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக பல பொதுமக்கள் பாதிக்கப்பட்டதுடன் சொத்துக்களும் சேதமடைந்துள்ளன.

அரச நிவாரண நிதி தொடர்பில் வடக்கில் தொடரும் முறைப்பாடுகள்: றஜீவன் எம்.பி விளக்கம்! | Rajeewan Mp About Disaster

சில இடங்களில் பிரதேச செயலக மட்டத்தில் தங்களுடைய சேதம் தொடர்பான பதிவுகள் முறையாக பதியப்படவில்லை, கண்காணிக்கப்படவில்லை என்கிற முறைப்பாடுகள் வருகின்றன.

அது சம்பந்தமாக மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். கிராம மட்டத்திலே கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இந்த சேதங்களை கள ஆய்வு செய்து சரியான தகவல்களை அவர்கள் வழங்க வேண்டும்.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்ற முறைப்பாடு வரக்கூடாது என ஜனாதிபதி எமக்கு தெரிவித்துள்ளார்.

யாராவது மக்கள் முறைப்பாடு செய்தால் அதிகாரிகள் அவர்களுடன் முரண்படாது அது தொடர்பில் ஆராய்ந்து செயல்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பொதுமக்கள் முறைப்பாடு செய்யும்போது அவர்களுடன் அரசு அதிகாரிகள் முரண்படுகின்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றது. அது தொடர்பாக நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.

அரசாங்கம் சரியான நிவாரணத்தை அறிவித்திருக்கிறது. அவர்கள் மனிதாபிமானமாக செயற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் செல்ல அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

கடற்றொழிலாளர்கள்

கடற்றொழிலாளர்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக பல நாட்களாக அவர்கள் தொழிலில் ஈடுபடவில்லை. நாளாந்தம் உழைப்பவர்கள் இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தின கூலிகளுக்கு செல்வோரும் இந்த மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது சம்பந்தமாக மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்று அவர்களுக்கான ஒரு தீர்வை கட்டாயம் நாம் பெற்றுக் கொடுப்போம்.

அரச நிவாரண நிதி தொடர்பில் வடக்கில் தொடரும் முறைப்பாடுகள்: றஜீவன் எம்.பி விளக்கம்! | Rajeewan Mp About Disaster

எழுபது நாடுகளுக்கு மேல் நேரடியாக தொடர்புகொண்டு உதவி பொருட்களை வழங்கி வருகின்றன. புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துக்கு நேரடியாக உதவி செய்கின்றார்கள்.

இந்த இடத்தில் சுனாமி வந்த பொழுது ஏற்பட்ட அழிவுகளை விட மூன்று மடங்கு அழிவுகள் தற்போது ஏற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கவும்..! பொதுமக்களுக்கு அவசர கோரிக்கை

இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கவும்..! பொதுமக்களுக்கு அவசர கோரிக்கை

மலையக மக்களுக்கு வடக்கு, கிழக்கில் நிலம்.....! மனம் திறக்கும் எம்.ஏ.சுமந்திரன்

மலையக மக்களுக்கு வடக்கு, கிழக்கில் நிலம்.....! மனம் திறக்கும் எம்.ஏ.சுமந்திரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி