மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி விட்டு, மீண்டும் அரசியலில் உள்நுழைய கோட்டாபய திட்டம்

Gotabaya Rajapaksa Sri Lanka SL Protest
By Shalini Balachandran Mar 10, 2024 08:15 AM GMT
Report

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் 'அரகலய' போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் மாறாக சிங்களவர்களே அப்போராட்டத்தின் முக்கிய பங்காளிகளாக செயற்பட்டனர் எனவும் மக்கள் பேரவையின் செயற்பாட்டாளரான ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் எழுச்சியடைந்த மக்கள் போராட்டத்தின் விளைவாக நாட்டை விட்டு வெளியேறி பதவி விலகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் எழுதப்பட்ட 'அதிபர் பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி' எனும் நூல் கடந்த வார இறுதியில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் குறித்த புத்தகத்தில் 'அரகலய' போராட்டத்தின் பின்னணி, போராட்டக்காரர்களின் எழுச்சியை அடுத்து தான் நாட்டை விட்டு வெளியேறிய விதம் மற்றும் அவ்விவகாரத்தில் நிலவிய வெளிநாட்டுத் தலையீடுகள் போன்ற பல்வேறு விடயங்களையும் கோட்டாபய ராஜபக்ச அவரது பார்வையின் அடிப்படையில் உள்ளடக்கியுள்ளார்.

அச்சமின்றி பதவியை ஏற்ற ஒரே தலைவர் ரணில் மட்டுமே: கோட்டாபய புகழாரம்

அச்சமின்றி பதவியை ஏற்ற ஒரே தலைவர் ரணில் மட்டுமே: கோட்டாபய புகழாரம்

சிறுபான்மையினர்

இதனடிப்படையில் குறித்த புத்தகத்தில் முக்கிய அம்சமாக 'அரகலய போராட்டத்துக்கு வருகை தந்தவர்கள் யார் என நன்கு ஆராய்ந்தால் அவர்கள் அனைவரும் ஏற்கனவே என்னை எதிர்த்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளவதுடன் அப்போராட்டத்தில் சிறுபான்மையினரின் வகிபாகம் பெருமளவுக்கு இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி விட்டு, மீண்டும் அரசியலில் உள்நுழைய கோட்டாபய திட்டம் | Rajiv Talks About Gotabaya Aragala Protest Issues

மேலும் தெரிவித்த கோட்டாபய போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழர்கள் மற்றும் பொதுபலசேனாவின் எழுச்சிக்குப் பின்னர் முஸ்லிம்கள் என்னை விரோதியாகவே பார்த்தார்களென்றும் எனவே நான் பதவியில் தொடர்ந்தால் சிங்களவர்கள் மற்றும் பௌத்தர்கள் மேலும் பலப்படுத்தப்படுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக இப்போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அவர்கள் தூண்டப்பட்டிருக்கக்கூடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து 'அரகலய' போராட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தொடர்ந்து பங்கேற்றுவந்த சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் அவரது கருத்தை தெரிவித்திருந்தார்.

பொய்களை பரப்பும் கோட்டாபய: கடுமையாக சாடும் மனோகணேசன்

பொய்களை பரப்பும் கோட்டாபய: கடுமையாக சாடும் மனோகணேசன்

ஆட்சி பீடம் 

மேலும் தெரிவித்த ராஜ்குமார், ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சி பீடம் ஏறுவதற்கும் தமது இயலாமைகளை நியாயப்படுத்திக்கொள்வதற்கும் மேற்கொள்ளும் ஒரு முயற்சியாகவே தாம் இதனைப் பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி விட்டு, மீண்டும் அரசியலில் உள்நுழைய கோட்டாபய திட்டம் | Rajiv Talks About Gotabaya Aragala Protest Issues

அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் 'அரகலய' போராட்டத்தில் பங்கேற்கவில்லையெனவும் மாறாக சிங்களவர்களே அப்போராட்டத்தின் முக்கிய பங்காளிகளாக செயற்பட்டனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் தேவையேற்படும் பட்சத்தில் தாம் விரிவான தெளிவுபடுத்தல்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவின் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது : சம்பிக்க விளாசல்

கோட்டாபயவின் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது : சம்பிக்க விளாசல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026