Sunday, Apr 13, 2025

மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி விட்டு, மீண்டும் அரசியலில் உள்நுழைய கோட்டாபய திட்டம்

Gotabaya Rajapaksa Sri Lanka SL Protest
By Shalini Balachandran a year ago
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் 'அரகலய' போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் மாறாக சிங்களவர்களே அப்போராட்டத்தின் முக்கிய பங்காளிகளாக செயற்பட்டனர் எனவும் மக்கள் பேரவையின் செயற்பாட்டாளரான ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் எழுச்சியடைந்த மக்கள் போராட்டத்தின் விளைவாக நாட்டை விட்டு வெளியேறி பதவி விலகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் எழுதப்பட்ட 'அதிபர் பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி' எனும் நூல் கடந்த வார இறுதியில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் குறித்த புத்தகத்தில் 'அரகலய' போராட்டத்தின் பின்னணி, போராட்டக்காரர்களின் எழுச்சியை அடுத்து தான் நாட்டை விட்டு வெளியேறிய விதம் மற்றும் அவ்விவகாரத்தில் நிலவிய வெளிநாட்டுத் தலையீடுகள் போன்ற பல்வேறு விடயங்களையும் கோட்டாபய ராஜபக்ச அவரது பார்வையின் அடிப்படையில் உள்ளடக்கியுள்ளார்.

அச்சமின்றி பதவியை ஏற்ற ஒரே தலைவர் ரணில் மட்டுமே: கோட்டாபய புகழாரம்

அச்சமின்றி பதவியை ஏற்ற ஒரே தலைவர் ரணில் மட்டுமே: கோட்டாபய புகழாரம்

சிறுபான்மையினர்

இதனடிப்படையில் குறித்த புத்தகத்தில் முக்கிய அம்சமாக 'அரகலய போராட்டத்துக்கு வருகை தந்தவர்கள் யார் என நன்கு ஆராய்ந்தால் அவர்கள் அனைவரும் ஏற்கனவே என்னை எதிர்த்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளவதுடன் அப்போராட்டத்தில் சிறுபான்மையினரின் வகிபாகம் பெருமளவுக்கு இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி விட்டு, மீண்டும் அரசியலில் உள்நுழைய கோட்டாபய திட்டம் | Rajiv Talks About Gotabaya Aragala Protest Issues

மேலும் தெரிவித்த கோட்டாபய போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழர்கள் மற்றும் பொதுபலசேனாவின் எழுச்சிக்குப் பின்னர் முஸ்லிம்கள் என்னை விரோதியாகவே பார்த்தார்களென்றும் எனவே நான் பதவியில் தொடர்ந்தால் சிங்களவர்கள் மற்றும் பௌத்தர்கள் மேலும் பலப்படுத்தப்படுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக இப்போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அவர்கள் தூண்டப்பட்டிருக்கக்கூடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து 'அரகலய' போராட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தொடர்ந்து பங்கேற்றுவந்த சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் அவரது கருத்தை தெரிவித்திருந்தார்.

பொய்களை பரப்பும் கோட்டாபய: கடுமையாக சாடும் மனோகணேசன்

பொய்களை பரப்பும் கோட்டாபய: கடுமையாக சாடும் மனோகணேசன்

ஆட்சி பீடம் 

மேலும் தெரிவித்த ராஜ்குமார், ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சி பீடம் ஏறுவதற்கும் தமது இயலாமைகளை நியாயப்படுத்திக்கொள்வதற்கும் மேற்கொள்ளும் ஒரு முயற்சியாகவே தாம் இதனைப் பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி விட்டு, மீண்டும் அரசியலில் உள்நுழைய கோட்டாபய திட்டம் | Rajiv Talks About Gotabaya Aragala Protest Issues

அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் 'அரகலய' போராட்டத்தில் பங்கேற்கவில்லையெனவும் மாறாக சிங்களவர்களே அப்போராட்டத்தின் முக்கிய பங்காளிகளாக செயற்பட்டனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் தேவையேற்படும் பட்சத்தில் தாம் விரிவான தெளிவுபடுத்தல்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவின் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது : சம்பிக்க விளாசல்

கோட்டாபயவின் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது : சம்பிக்க விளாசல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், Toronto, Canada

14 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Wimbledon, United Kingdom, Barnet, United Kingdom

09 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மல்லாவி, விசுவமடு, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

11 Apr, 2025
மரண அறிவித்தல்

நுவரெலியா, மட்டக்களப்பு, கொழும்பு, Michigan, United States

11 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Thampalai, பிரான்ஸ், France, London, United Kingdom

13 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், பாண்டியன்தாழ்வு, Fontainebleau, France

13 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020