ரணில் தொடர்பில் பிரதம நீதியரசருக்கு சென்றது கடிதம்
சிறிலங்கா அதிபரின் கடமையை பார்க்க முடியாது
ரணில் எந்த வகையிலும் சிறிலங்கா அதிபரின் கடமையை பார்க்க முடியாது எனவும் பிரிவு 37 (2)ன் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சிறிலங்கா அதிபராக பதவி வகித்து வந்த கோட்டாபய ராஜபக்ஷ, மக்களின் எதிர்ப்பின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி, ஜனநாயக விரோத சக்திகளை வெளிக்கொணர்ந்து, மக்களின் அடிப்படை உரிமைகளை முழுமையாக நசுக்கும் சூழலை உருவாக்கியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கைகள்
கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் அவர் ஜனநாயகத்தை மதிக்காத ஒரு தலைவராகவும், மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டத் தவறிய தலைவராகவும் தெளிவாகக் காட்டப்பட்டிருப்பதாகவும் இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பிரதம நீதியரசர், உரிய நடவடிக்கை எடுக்காமல் நாட்டை விட்டு ஓடியதன் மூலம், சிறிலங்கா அதிபர் பதவியை கைவிட்டதன் மூலம், அவர் இதுவரை நடந்துகொண்ட விதம் மற்றும் குறிப்பாக தனது வாரிசு குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
பிரதம நீதியரசருக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு அதிகாரம்
அரசியலமைப்பின் 37 ஆவது சரத்தின் பிரகாரம் பிரதம நீதியரசருக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக தயாசிறி ஜயசேகர பிரதம நீதியரசரிடம் கோருகின்றார்.
கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், பிரதமர் தனது பதவி தொடர்பான பணிகளைச் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்த வகையிலும் சிறிலங்கா அதிராக பணியாற்ற முடியாது என பிரதம நீதியரசருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
