வெள்ள அனர்த்தம்: நேரடியாக களத்தில் இறங்கிய ரணில்
Colombo
Ranil Wickremesinghe
Weather
Floods In Sri Lanka
By Sathangani
கொழும்பு (Colombo), கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை ஆராய அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மேற்பார்வைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இன்று (03) பிற்பகல் குறித்த பகுதிகளுக்கு அதிபர் ரணில் விஜயம் செய்துள்ளார்.
இதன்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான பணிப்புரைகளை அதிபர் அதிகாரிகளுக்கு வழங்கினார்.
மக்கள் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்