கைதுக்கு முன்னதாக ரணிலை சந்தித்த இந்தியாவின் சக்திவாய்ந்த நபர்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்படுவதற்கு முதல் நாள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சஷி தரூரை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது, கொழும்பில் உள்ள ஓர் ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரியும் கலந்துக் கொண்டுள்ளதுடன், அது தொடர்பான பதிவை அவரது எக்ஸ் கணக்கிலும் வெளியிட்டுள்ளார்.
ரணிலை சந்திக்க வரும் முக்கிய குழு
இந்திய முன்னாள் மந்திரியாகவும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராகவும் உள்ள சஷி தரூர், அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திக்கு பதிலாக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
Was honoured to be joined at dinner by former President of SriLanka Ranil Wickramasinghe and former Foreign Minister @alisabrypc as well as representatives of the younger generation, for a delightfully wide-ranging conversation on everything from India and BRICS to Sri Lanka’s… pic.twitter.com/zCMG5Gjcof
— Shashi Tharoor (@ShashiTharoor) August 17, 2025
இதேவேளை, எதிர்வரும் 28 ஆம் திகதி அமெரிக்கத் தூதரக குழுவொன்றும் ரணில் விக்ரமசிங்கவை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதுடன், சந்திப்பின் நோக்கங்களோ இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என தெரியவருகிறது.
ரணிலின் விஜயங்கள்
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில், எதிர்வரும் காலங்களில் நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நேபாள விஜயம் ஓர் ஹோட்டல் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காகவெனவும், இந்தியா தொடர்பான பயண விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்