சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் ரணில் : சிறீதரன் குற்றச்சாட்டு
காலத்திற்கு காலம் தேர்தல் ஆணைக்குழுக்களுக்களை நியமித்து, அதிபர் தேர்தலை பிற்படும் நடவடிக்கையில் சிறிலங்க அதிபர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்கும் நோக்கில் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு செயற்படுவதாக கிளிநொச்சியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் இழுத்தடிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், “காலத்திற்கு காலம் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அவற்றினால் எந்த விதமான பிரயோசனமோ நீதியோ கிடைக்கவில்லை.

இதுவும் அதுபோன்ற அதிபர் தேர்தலை பிற்போடும் நோக்குடன் உருவாக்கப்பட்டதாகவே கருதவேண்டும்.
அதிபருக்கு தேர்தல் என்பது பாகற்காய் போன்றது. அவரின் நோக்கம் பொருளாதாரத்தை உயர்த்துவதாக தெரிவித்து தொடர்ந்து ஆட்சியை கொண்டு செல்வதே.
அடுத்த வருடம் அதிபர் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களும் நடாத்தப்படவேண்டும்” - என்றார்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 1 மணி நேரம் முன்