பசில் விளையாட முடியாத போட்டியை விளையாட தயாராகும் ரணில்
அரசாங்கத்தின் நம்பகமான நகர்வுகளுக்கு ஆதரவளிப்போம் என தேசிய சுதந்திர முன்னணியின் (NFF) தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
தமது தரப்பால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அரச தலைவர் இணக்கம் தெரிவித்த போதிலும், திடீரென ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் எதிர்கொள்ளப்போகும் நெருக்கடி குறித்து ஆரம்பத்திலிருந்தே எச்சரித்து வந்தோம்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்.
அதன் விளைவாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் நானும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டோம்,” பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும், பின்னர் அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவும், ஒவ்வொரு கட்சியிலிருந்தும் ஒரு பிரதிநிதியைக் கொண்ட தேசிய சபையை (NC) அமைக்கவும் ஏற்கனவே முன்மொழிந்துள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
மகிந்த ராஜபக்ச அமைதியாக பதவி விலகினால், அவர் மறைந்திருக்க வேண்டிய அவசியமில்லை, இந்த நிலையை தவிர்த்திருக்கலாம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சனத் நிஷாந்த, மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் அவரை அமைதியான முறையில் பதவி விலக விடவில்லை. ஆனால் நாங்கள் நாட்டை ஸ்திரப்படுத்தவே விரும்பினோம்” என வீரவன்ச கூறினார்.
தமது முன்மொழிவுகளுக்கு அரச தலைவர் சாதகமாக பதிலளித்ததாகவும், ஆனால் முன்னாள் பிரதமர் பதவி விலக விரும்பவில்லை எனவும் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.