தேர்தலுக்கு பணம் இல்லை என்பது ரணில்-ராஜபக்சவின் நாடகம் - குற்றம் சுமத்தும் இலங்கையின் முன்னணி சங்கம்
தோல்வி அச்சத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான பல்வேறு சூழ்ச்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக சிறிலங்கா ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில் வாக்குச் சீட்டுகளை அச்சிட முடியாது என சிறிலங்கா அச்சகம் அறிவித்துள்ள விடயமானது சூழ்ச்சியின் ஒரு அங்கமென அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பணம் இல்லையென்றே நாடகம்
தேர்தலை நடத்தாமல் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமையை இல்லாது செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.
அரச அச்சகத் தலைவரின் ஊடாக இந்த சூழ்ச்சி இடம்பெறுகிறது. வரலாற்றில் ஒரு நாளும் பணம் இல்லையென இவை இடம்பெறவில்லை. பணம் இல்லையென்றே இந்த நாடகம் நடக்கிறது.
இலங்கை மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வினை வழங்காத தற்போதைய அரசாங்கம் வாக்குரிமையையும் இல்லாது செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்கிறது.
இவ்வாறான அரசாங்கத்தின் சூழ்ச்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவது இல்லை.'' என தெரிவித்துள்ளார்.
