ரணிலின் பிரித்தானிய பயணம் தொடர்பான விசாரணைகளில் குழப்பம்!

CID - Sri Lanka Police Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Police Investigation
By Kanooshiya Jan 11, 2026 08:06 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானிய பயணத்தின் போது ​​16.6 மில்லியன் ரூபாய் அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, சட்டமா அதிபர் திணைக்களத்தில் இரண்டு வெவ்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வாரஇறுதி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதா அல்லது இந்த விவகாரம் தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் அடிப்படையில் ஆதாரங்கள் போதுமானதாக இல்லையா என்பது தொடர்பில் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளதாக செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழில் தொடருந்துடன் மோதி படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!

யாழில் தொடருந்துடன் மோதி படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!

விசாரணை

சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசாரணையை மேற்பார்வையிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, விசாரணை தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்தப் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக குறித்த ஊடகம் வெளிப்படுத்தியுள்ளது.

ரணிலின் பிரித்தானிய பயணம் தொடர்பான விசாரணைகளில் குழப்பம்! | Ranil Trip To England Confusion In Investigations

அதன்படி, குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தினுள் இரண்டு கருத்துக்கள் இருப்பதாகவும், விசாரணையில் இருந்து இராஜினாமா செய்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, ரணில் விக்ரமசிங்க மீது வழக்குத் தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி ஆறு பக்க அறிக்கையை சமர்ப்பித்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் குறித்த செய்தியில், “விசாரணையின் முன்னணி மேற்பார்வை அதிகாரியான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், வசந்த பெரேராவின் கருத்துக்கு முரணான கருத்தை சமர்ப்பித்து, கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் விக்ரமசிங்க மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு

வாகன இறக்குமதி குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு

அறிக்கை

எனினும், தனது அறிக்கையில், கியூபாவிலிருந்து நியூயோர்க்கிற்கும் இலங்கைக்கும் பயணம் செய்யும்போது பிரித்தானியா வழியாக செல்வது ரணில் விக்ரமசிங்கவிற்கு புதிதல்ல எனவும், வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்திலிருந்து அழைப்புக் கடிதம் கிடைத்தாலும் இல்லாவிட்டாலும், அவர் இங்கிலாந்தில் ஒரு முறை தங்க வேண்டியிருக்கும் எனவும் வசந்த பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரணிலின் பிரித்தானிய பயணம் தொடர்பான விசாரணைகளில் குழப்பம்! | Ranil Trip To England Confusion In Investigations

எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவில் தனது தனிப்பட்ட பயணத்திற்காக பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதைத் தடுக்க சட்டமா அதிபர் திணைக்களத்துக்குள் இந்த கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளனவா என்பது தொடர்பில் தற்போது ஒரு தீவிரமான சந்தேகம் எழுந்து வருகிறது.

இம்மாதம் 28 ஆம் திகதி குறித்த வழக்குத் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், குறித்த செய்தியாலும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் உள் நடத்தையினாலும் இந்த சந்தேகம் மேலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2026 இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டு இலக்கு! அமைச்சரின் அறிவிப்பு

2026 இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டு இலக்கு! அமைச்சரின் அறிவிப்பு

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி - சட்டத்தரணி சுகாஸ் காட்டம்

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி - சட்டத்தரணி சுகாஸ் காட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...  
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025