ரணிலின் அரசியல் தந்திரோபாயம்! சரியான நேரத்தில் வருவார் - ஐ.தே.க சூளுரை
srilanka
ranil wickremesinghe
By Vasanth
அரசியல் தந்திரோபாயங்கள் உரிய நேரத்தில் எடுக்கப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க சரியான நேரத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
புத்தாண்டுக்குப் பிறகு, ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைகள் அனைவருக்கும் தெரியும். இந்த ஆண்டு மே தினத்தில் இளைஞர் மாநாட்டை நடத்தவும் கட்சி செயற்குழு முடிவு செய்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்