ரஞ்சனுக்கு பதவிகளை அள்ளி வழங்கும் சஜித்
பதவிகளை வழங்கும் சஜித்
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் சஜித் பிரேமதாச இதனை இன்று கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராகவும் இணைக்கப்படுவார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஊழல் எதிர்ப்பு முயற்சி
அத்தோடு தமது கட்சியின் ஊழல் எதிர்ப்பு முயற்சிக்கு ரஞ்சன் ராமநாயக்க தலைமை தாங்குவார் என சஜித் பிரேமதாச பதிவிட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், சிறையில் வாடிய ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கியிருந்தார்.
அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தை விமர்சிக்கவோ, இன்னும் 7 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவோ முடியாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தான் சுயாதீனமாக, மக்கள் பக்கம் இருந்து ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கப்போவதாக நேற்று ரஞ்சன் ராமநாயக்க கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
People’s hero @RamanayakeR will be made a member of the @sjbsrilanka working committee and a member of the SJB parliamentary group. He will also spearhead the anti corruption effort of the SJB.. pic.twitter.com/7aMNHDYx20
— Sajith Premadasa (@sajithpremadasa) August 27, 2022
தொடர்புடைய செய்திகள்
விடுதலையானதும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ள ரஞ்சன்!
சத்தியக் கடதாசியை சமர்ப்பித்தார் ரஞ்சன் ராமநாயக்க! விடுதலையாகும் திகதி குறித்து வெளியான தகவல்

