அரசியல் உச்சத்தை எட்டும் பாதையில் முஸ்லிம் காங்கிரஸை வழிநடத்துவோம்:ஹக்கீம் சூளுரை(படங்கள்)

Parliament of Sri Lanka Srilanka Muslim Congress Rauf Hakeem Sri Lanka Politician Sri Lanka
By Shadhu Shanker Sep 17, 2023 06:38 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

அரசியல் உச்சத்தை எட்டும் பாதையில் முஸ்லிம் காங்கிரஸை வழிநடத்துவோம், இதற்காக மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பின் அந்திமகால முயற்சிகளை நாம் முன்னெடுப்பதற்கான ஆரம்ப நிகழ்வாக இன்றைய நினைவேந்தலை எடுத்துக் கொள்வோம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர், மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 23 ஆவது வருட நினைவு தின தேசிய நினைவேந்தல் நிகழ்வு நேற்று (16) சாய்ந்தமருது பௌஸி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போது இவ்வாறு கூறினார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்தியா வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் தமிழ்த்  துறைத் தலைவர் கவிமாமணி பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் கலந்து கொண்டார்.

அதன்போது, அஷ்ரப்பின் அரசியல் முன்னெடுப்புகள், இலங்கை அரசியலில் அஷ்ரப்பின் வகிபாகம், இலங்கை தேசிய அரசியலில் அஷ்ரப்பின் சாதனைகள், முஸ்லிம் அரசியலில் அஷ்ரப் சாதித்தவை, சர்வதேச தொடர்புகளை பேண அஷ்ரப் கையாண்ட முறைகள் தொடர்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

அரசியல் உச்சத்தை எட்டும் பாதையில் முஸ்லிம் காங்கிரஸை வழிநடத்துவோம்:ஹக்கீம் சூளுரை(படங்கள்) | Rauf Hakeem

பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் உண்மைகள்

பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் உண்மைகள்

மு.கா. தவிசாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல். எம்.மஜிட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் ஆத்ம ஈடேற்றத்திற்காக விசேட கத்தமுல் குர்ஆன், மற்றும் விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.

நினைவேந்தல் நிகழ்வில் 

கல்முனை மாநகர முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீரா சாஹிப்பின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வில் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில், முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கம் நாட்டின் ஆட்சிக் கதிரைகள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பில் இருந்தாலும், முஸ்லிம் சமூகத்தின் ஆளும் கட்சி முஸ்லிம் காங்கிரஸேதானாகும்.

மறைந்த தலைவர் அஷ்ரப் தமது அந்திமகாலத்தில் முன்னெடுத்து விட்டுச் சென்ற விடயங்கள் பல உள்ளன.

முக்கியமாக அவர் அந்திம காலத்தில் கட்சியோடு முரண்பட்டு இருந்தவர்கள் மற்றும் மாற்றுக் கட்சிகளில் இணைந்து இருந்தவர்களை வீடு வீடாகச் சென்று சந்திப்புகளை நடத்தி, முஸ்லிம் காங்கிரஸூக்குள் உள்வாங்கும் முயற்சிகளைச் செய்து வெற்றியும் கண்டார்.

அரசியல் உச்சத்தை எட்டும் பாதையில் முஸ்லிம் காங்கிரஸை வழிநடத்துவோம்:ஹக்கீம் சூளுரை(படங்கள்) | Rauf Hakeem

அஷ்ரப்புக்கு முன்பும் பின்பும்

அந்த வகையில் வெளியில் உள்ளவர்க ளையும் நமது பாசறையில் இணைப்பதற் கான முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். இதற்காக முஸ்லிம் காங்கிரஸின் கதவு இனி எப்போதும் திறந்தே இருக்கும்.

நமது அரசியலைப் பொறுத்தவரை அஷ்ரப்புக்கு முன்பும் பின்பும் என்றே எழுதப்படும். முஸ்லிம் காங்கிரஸை மலினப்படுத்தி, சிறுமைப்படுத்தி, சிதைத்து விடும் எத்தகைய முயற்சிக்கும் இடமளிக்க முடியாது.

அனைவருக்கும் நியாயம் செய்யும் தலைவராகவே கட்சியின் செயற்பாடுகளை நான் முன்னெடுத்து வருகிறேன்.

அரசியல் உச்சத்தை எட்டும் பாதையில் முஸ்லிம் காங்கிரஸை வழிநடத்துவோம்:ஹக்கீம் சூளுரை(படங்கள்) | Rauf Hakeem

ஹக்கீம் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்

ஹக்கீம் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்


முஸ்லிம் காங்கிரஸைத் தொடர்ந்து முஸ்லிம்கள் அனைவரதும் பாசறையாகவும் அரவணைக்கும் அரசியல் கட்டமைப்பாகவும் முன் கொண்டு செல்வோம்.

என்றார் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரிஷ் ,பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் ஆகியோர் உரையாற்றினர்.

கலந்து கொண்டவர்கள்

கனடா எடுத்துள்ள திடீர் முடிவு

கனடா எடுத்துள்ள திடீர் முடிவு

இந்நிகழ்வில் உலமாக்கள், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் அதிபர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரி யப்பர், நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ், எம்.எஸ் தௌபீக், முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம் மன்சூர், செய்யது அலி சாஹீர் மௌலானா, ஹனைஸ் பாருக், முன்னாள் மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான், கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சிப்பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். 

மூன்றாவது நாளாகவும் தொடரும் பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம்!(படங்கள்)

மூன்றாவது நாளாகவும் தொடரும் பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம்!(படங்கள்)


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023