அமெரிக்க அதிகாரிகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய பேச்சு
RAUF HAKKIM
AMERICA
MEETING
By Vanan
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் முக்கிய அதிகாரிகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பதில் தலைமை அதிகாரியும், அதன் பொருளாதார பிரிவின் உயர் அதிகாரியுமான சுசான் எப். வல்கே மற்றும் தூதரகத்தின் பிரதி அரசியல் பிரதானியான மார்க்கஸ் பீ. காபெண்டர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, அதிகாரப் பகிர்வு, சட்டத்தின் ஆட்சி, பயங்கரவாத தடைச் சட்டம், சிறுபான்மையினர் தொடர்பிலான நிலைப்பாடுகள் போன்றவற்றை மையப்படுத்தி கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
