ஜப்பானிய வாகனங்களின் விலை அதிகரிப்பு : வெளியான காரணம்
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஜப்பானிய (Japan) வாகனங்களின் விலை அதிகரிப்பிற்கான பிரதான காரணத்தை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே வெளியிட்டுள்ளார்
அதன்படி, ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டிலிருந்து 5 அல்லது 7 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக 2 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்ததே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (1) முதல் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
வாகனத்தை வாங்க முடியாத நிலை
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”அரசாங்கத்தின் இந்த முடிவால், இந்த நாட்டின் ஒரு சாதாரண குடிமகனால் ஒரு கோடி ரூபாவிற்கு குறைவாக வாகனத்தை கொள்வனவு முடியாது.
இறுதியில் என்ன நடக்கும் என்றால், நாட்டின் சாதாரண குடிமகனால் வாகனத்தை வாங்க முடியாத நிலை ஏற்படும். இது சுமார் 5 ஆண்டுகளுக்கு செய்யப்பட்டிருந்தால் சுமார் 6 மில்லியன் முதல் 6.5 மில்லியன் ரூபாய்க்கு வாகனத்தை வாங்கியிருக்கலாம். ஆனால் அது இன்று இல்லாமல் போயுள்ளது.
உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளில் ஜப்பானிய வாகனங்களின் தற்போதைய ஏல விலை மற்றும் அது இந்நாட்டின் வரிகளுடன் சேர்க்கும் போது வாகனங்களின் விலைகள் இவ்வாறு அதிகரிக்கும்.
ஒரு கோடி ரூபாவாக அதிகரிக்கும்
அதன்படி, Toyota Raize 1200cc காரின் விலை சுமார் ஒரு கோடியோ 60 லட்சம் ரூபாவாக அதிகரிக்கக்கூடும். அத்துடன் Toyota Yaris வாகனத்தின் விலை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாவாக அதிகரிக்கக்கூடும்.
இதற்கிடையில், சுமார் ஒரு கோடியோ 95 லட்சம் பெறுமதியான Honda Vezel 1500cc ஹைப்ரிட் கார் சுமார் 2 கோடியே 40 லட்சம் ரூபாவிற்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் பலரால் விரும்பப்படும் காரான Wagon R காரின் விலை ஒரு கோடி ரூபாயை விட அதிகரிக்கலாம்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |