எரிபொருளின் விலை திருத்தம் செய்த மற்றுமொரு நிறுவனம்
2025 ஜனவரி 31 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சினோபெக் சுப்பர் டீசலின் சில்லறை விலையை திருத்தியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாதாந்த எரிபொருள் திருத்தத்திற்கு அமைய, பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்த எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப சினோபெக் (Sinopec) எரிபொருள் விலையும் திருத்தப்பட்டுள்ளன.
அதன்படி, இன்று (31) நள்ளிரவு முதல் சினோபெக் நிறுவனம் விற்பனை செய்யும் சுப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
பெட்ரொலியக் கூட்டுத்தாபனம்
அதன்படி, 313 ரூபாயாக இருந்த சுப்பர் டீசலின் விலையை 331 ரூபாயாக உயர்த்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை. நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சூப்பர் டீசலின் சில்லறை விலையை திருத்தியமைக்க பெட்ரொலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், லங்கா சூப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, அதன் புதிய விலை 331 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மற்றைய எரிபொருள்களின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என பெட்ரொலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |