றீச்ஷாவின் 2026ஆம் ஆண்டிற்கான மரதன் போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்டுங்கள்!
கிளிநொச்சி - இயக்கச்சியில் உள்ள றீச்ஷா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணை மாபெரும் மாரத்தான் ஓட்டப் போட்டியை நடத்தவுள்ளது.
குறித்த போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இளம் வீரர், வீராங்கனைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் இப்போட்டியில் பங்குபற்றுபவர்களுக்குப் பெறுமதியான பணப்பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
ஓட்டப் போட்டி
இப்போட்டியானது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எனத் தனித்தனியாக இரு பிரிவுகளில் நடைபெறவுள்ளது.
ஆண்களுக்கான 15 கிலோமீட்டர் ஓட்டப் போட்டி பளை நகரில் இருந்தும், பெண்களுக்கான 10 கிலோமீட்டர் ஓட்டப் போட்டி புதுக்காடு சந்திப்பில் இருந்தும் ஆரம்பமாகி 'றீச்ஷா' பண்ணை வரை நடைபெறும்.
வெற்றிபெறுபவர்களுக்கு முதலாம் பரிசாக ரூபா 50,000, இரண்டாம் பரிசாக ரூபா 25,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூபா 10,000 வழங்கப்படவுள்ளதுடன், 10 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
மேலதிக விபரங்கள்
பங்குபற்றுபவர்கள் மூன்று மாதங்களுக்குட்பட்ட மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
எனினும், இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்கள் இப்போட்டியில் பங்கேற்க முடியாது.

ஆர்வமுள்ளவர்கள் ReeCha App ஊடாக ரூபா 500 விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திப் பதிவு செய்துகொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு 077 666 4194 அல்லது 077 666 5022 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |