ஈரானில் அதிகார மாற்றம் : இடைக்காலத் தலைமைச் சபை பொறுப்பேற்பு
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) மறைவைத் தொடர்ந்து, நாட்டின் அதிகார வெற்றிடத்தை நிரப்புவதற்காக ‘இடைக்காலத் தலைமைத்துவ சபை’ ஒன்று இன்று அமைக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளர் அலி லரிஜானி (Ali Larijani) இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.
ஈரானிய அரசியலமைப்புச் சட்டத்தின் 111வது பிரிவின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 பேர் கொண்ட தற்காலிக சபை
இதன்படி, புதிய அதி உயர் தலைவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் வரை, நாட்டின் முக்கியப் பொறுப்புகளை இந்தத் தற்காலிக சபை கவனித்துக் கொள்ளும்.
Ali Larijani: A temporary leadership council will soon be formed, and a new leader will be elected!#Iran#Tehran#MiddleEast#Israel#UnitedStates pic.twitter.com/M9KzOkxvGX
— Consulate General of the I.R. Iran in Mumbai (@IRANinMumbai) March 1, 2026
ஈரானிய ஊடகங்களின் தகவல்படி, இந்தத் தற்காலிகச் சபையில் மூன்று முக்கிய நபர்கள் இடம்பெறவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், உயர் நீதிமன்றத் தலைமை நீதியரசர் கோலம்-ஹொசைன் மொஹ்சேனி-எஜேய், பாதுகாவலர் சபையைச் சேர்ந்த மூத்த மதகுரு ஒருவரும் இதில் இணைக்கப்படவுள்ளார்.
ஈரானின் 'நிபுணர்கள் பேரவை' (Assembly of Experts) புதிய உச்ச தலைவரை உத்தியோகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கும் வரை இந்தச் சபை செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |