ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் கைது: ஏழு நாட்கள் தடுப்புக் காவலில்...!
ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் ப. உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில், ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், நீர்கொழும்பு, கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து உதயராசா கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றச் செயல்கள்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பேலியகொடைப் பகுதியில் கடந்த மாதம் 29ஆம் திகதி நான்கு கிலோ 423 மில்லிகிராம் கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இந்தநிலையில், குறித்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் உதயராசா தொடர்புபட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், மேல் மாகாணத்தின் வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், கொழும்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல முக்கிய குற்றச் செயல்களுடன் உதயராசா தொடர்புபட்டுள்ளார் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |