“என்னை அரசியலில் இருந்து அகற்ற சதி” பிள்ளையான் வெளியிட்ட தகவல்
தன்னை ஒரு கொள்ளைக்காரன் போன்றும், மண் கொள்ளையில் ஈடுபடுவதாவும் சித்தரிக்க, சிலர் முயற்சிக்கின்றனர் என்கிறார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan).
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், என்னைப்போன்ற நபர்களை அரசியலில் இருந்து அகற்றுவதற்கு, சிலர் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துரைத்த அவர், “கடந்த காலத்தில் என்னைப் பழிவாங்கி, அரசியலில் இருந்து வெளியேற்ற, சிறையில் அடைத்தனர்.
ஆனால் நான் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று, அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ளேன் என்பதற்காக, அதனை சகித்துக்கொள்ள முடியாத இவர்கள், இவ்வாறு பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.
அரசியலுக்காக பொய்களை கூறாது பொறுப்பு வாய்ந்தவர்களாக சம்பந்தப்பட்ட நபர்கள் பேச வேண்டும்” என்றார்