“மிகவும் விரும்பப்படும் நிறுவனம்” :சிறிலங்கன் எயார் லைன்ஸிற்கு கிடைத்த கௌரவம்
சிறிலங்கன் எயார்லைன்ஸ்(sri lankan airlines) விமானப் போக்குவரத்து துறையில் மிகவும் விரும்பப்படும் நிறுவனம் என முத்திரை பதித்துள்ளது.
LMD நடத்திய சமீபத்திய ஆய்வில் இந்த விடயம் விடயம் தெரியவந்துள்ளது. 2025ஆம் ஆண்டின் வருடாந்திர தரவரிசையில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
சிறப்பான தேசிய விமான நிறுவனம்
விமான பயணிகளின் நட்பு ரீதியான விருந்தோம்பல், விரிவான விமான வலையமைப்பு நேரடி விமானங்கள் மற்றும் தடையற்ற இணைப்பு காரணமாக இலங்கை விமானப் பயணிகளின் சிறப்பான தேசிய விமான நிறுவனம் என்ற நிலையை இந்த அங்கீகாரத்தின் மூலம், சிறிலங்கன் எயார்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
விமான நிறுவனம் அதன் பயணிகளுக்கு இணையற்ற விருந்தோம்பல், அவர்களின் ரசனைக்கு ஏற்ற சர்வதேச மற்றும் உள்ளூர் உணவு வகைகள் மற்றும் அவர்களின் இலக்குக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வாரந்தோறும் சுமார் 300 நேரடி விமான சேவை
சிறிலங்கன் எயார்லைன்ஸ் 59 நாடுகளுக்கும் 113 இடங்களுக்கும் செயல்படுகிறது. இது கொழும்பிலிருந்து வாரந்தோறும் சுமார் 300 நேரடி விமான சேவைகளை முன்னெடுக்கிறது.
இந்திய துணைக்கண்டத்தின் முக்கிய நகரங்கள், மத்திய கிழக்கு, ஐரோப்பா, தூர கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் அவுஸ்திரேலியாவை உள்ளடக்கியது.
கொழும்பிலிருந்து நேரடி விமானங்கள் மற்றும் அவர்களின் இடங்களுக்கு தடையற்ற இணைப்பைத் தேடும் பயணிகளுக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முதல் தேர்வாக மாறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
