கஸ்ஸப தேரர் உள்ளிட்டோரை விடுவிக்குமாறு கோரி திருமலையில் வெடித்த போராட்டம்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும் பிணையில் விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை சங்கமித்தை விகாரைக்கு முன்பாக இன்று (10) குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது.
விடுதலை செய்யுமாறு கோரி
இந்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு நாளை (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவங்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இந்த நிலையில் பௌத்த தேரர்கள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி குறித்த ஆரப்பாட்டம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |