40 அலுவலக புகையிரதங்களை இயக்க தீர்மானம் - புகையிரத திணைக்களம்
இன்றைய தினம்(13) சுமார் 40 அலுவலக புகையிரதங்களை இயக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், தேவை ஏற்பட்டால் ஏனைய நிலையங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரவு நேர அஞ்சல் புகையிரத சேவை
கொழும்பு கோட்டைக்கு 15 காலை புகையிரத பயணங்களும், புத்தளம் மார்க்கத்தில் இருந்து கொழும்புக்கு காலை 04 ரயில் பயணங்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
களனிவெளியில் இருந்து கொழும்பு கோட்டை வரை 4 புகையிரத பயணங்களும், கரையோரப் பாதையில் 17 புகையிரத பயணங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.
அலுவலகத்திற்கு செல்லும் பயணிகளுக்காக தூர மாகாணங்களில் இருந்து கொழும்பு கோட்டைக்கு இரவு நேர அஞ்சல் புகையிரதத்தை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
