கனடிய நபரொருவருக்கு அடித்த ஜாக்பாட்: கிடைத்த மில்லியன் டொலர் லாட்டரி பரிசு
கனடாவில் ஐந்து மில்லியன் டொலர் லாட்டரி பரிசை ஒருவர் பெற்றுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த ஜாக்கி எல் என்பவரே இவ்வாறு பரிசைப் பெற்றுள்ளார்.
ரிச்மண்ட் நகரைச் சேர்ந்த இவர், கடந்த ஜனவரி 28 ஆம் திகதி நடைபெற்ற “Lotto 6/49” குலுக்கலில் “க்விக் பிக் (Quick Pick)” முறையில் இந்தத் தொகையை வென்றுள்ளதாக B.C. Lottery Corporation (BCLC) தெரிவித்துள்ளது.
எஞ்சிய தொகை
இந்த வெற்றியின் மூலம் தனது வீட்டுக் கடனை முழுமையாகச் செலுத்தவும் எஞ்சிய தொகையை ஓய்வுக்கால சேமிப்பு மற்றும் தனது பேரக்குழந்தைகளின் எதிர்காலத்திற்காகப் பயன்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, "இனி நாங்கள் நிம்மதியாக இருக்க முடியும்" எனவும் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், ஐந்து மில்லியன் டொலர்களை வென்ற பின்னரும் லாட்டரி விளையாடுவதை நிறுத்தும் எண்ணம் தமக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணத்தைச் சீராகக் கையாளும் தனது வழக்கத்தையோ அல்லது தற்போதைய வாழ்க்கை முறையையோ பெரிய அளவில் மாற்றிக்கொள்ளப் போவதில்லை எனவும், அதிர்ஷ்டத்தை மீண்டும் சோதித்துப் பார்க்கும் வகையில் லாட்டரி விளையாடுவதைத் தொடரப்போவதாகவும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |