புதுவருட கொரோனா கொத்தணி தொடர்பில் வெளியான தகவல்!
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன (Asela Gunawardena) உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,284 ஆக பதிவாகியுள்ளது.
அதேவேளை இன்றைய தினம் மேலும் 845 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள கொரோனா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 601,048 அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 569,043 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
