உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகாிப்பு!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தற்போது சடுதியாக அதிகாித்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக உலக சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வரும் ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று 94 டொலரை நெருங்கி வருகிறது.
இதேவேளை, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையானது கடந்த 2014 செப்டெம்பர் மாதம் முதல் அதாவது கடந்த 7 வருடங்களில் 100 டொலரை தாண்டியிருக்கவில்லை.
இந்நிலையில், தற்போது ஏற்பட்டுவரும் இந்த சடுதியான விலை அதிகரிப்பை பார்க்கையில், எதிர்வரும் சில மாதங்களில் மசகு எணணெய் விலை 100 டொலரை தாண்டிவிடும் என சந்தை ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
அதேவேளை, பெற்றோல் மற்றும் டீசல் என்பனவற்றை சந்தைக்கு விடுவிக்கும்போது, தொடர்ந்தும் நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
டீசல் லீட்டர் ஒன்றிற்கு 36 ரூபாவினாலும், பெற்றோல் ஒரு லீட்டருக்கு 8 ரூபாவினாலும் நட்டம் ஏற்படுவதாக அதன் தலைவரான சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
