ரிஷாட்டின் மனைவி தலைமறைவு? பொலிஸார் வெளியிட்ட தகவல்
15 வயதான சிறுமி இஷாலினி மரணம் தொடர்பில் விசாரணை மேற் கொள்ளும் வகையில் பிரதி சொலிசிடர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் தலைமையிலான குழுவை சட்டமா அதிபர் நியமித்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டின் மனைவி தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்திருந்தன.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிந்த இஷாலினி தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அந்தப் பெண் ரிசாட்டின் வீட்டில் வைத்து பலவிதமான கொடுமைகளுக்கு உள்ளானதான குற்றச்காட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன.
இவை காரணமாக ரிசாட்டின் மனைவி கைதுசெய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதான செய்தி இன்று மாலை வெளிவந்திருந்தது.
இருப்பினும் சிறுமி இஷாலினியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு விசேட பொலிஸ் குழு சற்றுமுன் சென்றதாகவும், பொறளை பொலிஸாரினால் ரிஷாட்டின் மனைவியிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணைப்பு:
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி சட்டத்தரணி ஊடாக காவல்துறையிடம் இன்று மாலை முன்னிலையானார்.
வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
பொரளை பொலிஸை சேர்ந்த விசேட குழு ஒன்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.