களத்தில் இறங்கிய பிரதமர் ரிஷி சுனக் - ஒரே நாளில் 105 புலம்பெயந்தோர் கைது!
இங்கிலாந்தில் சட்டவிரோத குடியேற்றத்தை ஒழிப்பதற்கு பிரதமர் ரிஷி சுனக் முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.
சட்ட விரோதமாக வரும் அகதிகளுடனான விசாரணையும், அவர்களுக்கான சட்ட திட்டங்களையும் கடுமையாக்கினார்.
இந்நிலையில், தற்போது களத்தில் இறங்கிய பிரதமர் ரிஷி சுனக் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் சட்ட விரோதமாக குடியேறியவர்களை தேடிப்பிடித்து கைதுசெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடுதல் வேட்டை
காலையில் அதிகாரிகளுடன் புறப்பட்ட ரிஷி சுனக் விடுதிகள், மதுபான விடுதிகள், சலூன்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
இந்த தேடுதல் வேட்டையில் சட்ட விரோதமாக குடியேறிய சுமார் 20 நாடுகளை சேர்ந்த 105 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனை டுவிட்டரில் பகிர்ந்த ரிஷி சுனக், இந்த நடவடிக்கைக்கு பலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், அப்பாவி அகதிகளை சிரமத்திற்கு ஆளாக்குவதாக எதிர்மறையான கருத்துக்களும் பலதரப்பில் எழுகின்றன.
