யாழ். மந்திகையில் கோர விபத்து - ஒன்றுடன் ஒன்று மோதிய வாகனங்கள்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Independent Writer
யாழ். மந்திகை பகுதியில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் யாழ். மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDB) முன்பாக சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
அதிவேகமாக வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இந்த விபத்தின் போது ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
[DZ44CIN ]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்