அரச குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த ராணி - இளவரசர், இளவரசி பட்டங்கள் பறிப்பு!
டென்மார்க்கின் ராணி இரண்டாம் மார்கிரேத் தனது பேரக்குழந்தைகள் சிலரின் அரச பட்டங்களை பறித்து அரச குடும்பத்தை மெலிதாக மாற்றியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது இரண்டாம் மார்கிரேத், ஐரோப்பாவின் ஒரே ராணியாக உள்ளார். இவ்வாறான நிலையில், தனது நான்கு சந்ததியினர் இனி இளவரசர் மற்றும் இளவரசி என்ற பட்டங்களை வைத்திருக்க மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார்.
அதற்கமைய இளவரசர் நிகோலாய், இளவரசர் பெலிக்ஸ், இளவரசர் ஹென்ரிக் மற்றும் இளவரசி அதீனா ஆகியோரிடமிருந்து அரச பட்டங்களை ராணி மார்கிரேத் பறித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'your excellence' எனக் குறிப்பிடப்படும்
இவ்வாறான மாற்றங்களின் கீழ், ராணி இரண்டாம் மார்கிரேத்தின் இரண்டாவது மகன் இளவரசர் ஜோகிமினின் (Prince Joachim) நான்கு குழந்தைகளும் இப்போது 'Monzepat-ன் counts மற்றும் countesses' அல்லது 'your excellence' என்று மட்டுமே குறிப்பிடப்படுவார்கள்.
இந்த நடவடிக்கை இளவரசிகள் நிகோலாய், பெலிக்ஸ், ஹென்ரிக் மற்றும் இளவரசி அதீனா ஆகியோரை பாதிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க்கில் இப்போது 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியாக இருக்கும் ராணி இரண்டாம் மார்கிரேத், 'சமீபத்திய ஆண்டுகளில் மற்ற அரச குடும்பங்கள் பல்வேறு வழிகளில் செய்த இதே போன்ற மாற்றங்களுக்கு ஏற்ப' இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்தள்ளார்.
பட்டம் பறிக்கப்பட்ட குழந்தைகள்
ஆனால் இந்த நடவடிக்கை அரச பிளவு பற்றிய ஊகங்களை தூண்டியுள்ளதோடு, மாற்றங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக்கின் நான்கு குழந்தைகள், அவரது மூத்த மகன் அரியணை வாரிசாகப் பெறுவார்கள், இளவரசர்களாகவும் இளவரசிகளாகவும் இருப்பார்கள்.
பட்டங்கள் பறிக்கப்பட்ட நான்கு பேரக்குழந்தைகளும் வாரிசு வரிசையில் தொடர்வார்கள் என்ற உண்மை இருந்தபோதிலும், இது அவர்களை அசிங்கபடுத்தும் விதமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான நிலையில், நான்கு பேரக்குழந்தைகளுக்கும் அரச வாழ்க்கையிலிருந்து அதிக சுதந்திரம் கொடுக்க விரும்புவதாகவும், இளவரசர் ஜோகிமிடம் இருந்து முழு அமைதி நிலவுவதாகவும் ராணி தெரிவித்துள்ளார்.
மூன்றாம் சார்லஸின் நிலைப்பாடு என்ன?
ஆனால் இளவரசர் ஜோகிமின் முன்னாள் மனைவி கவுண்டஸ் அலெக்ஸாண்ட்ரா தரப்பில் இருந்து கோப வெளிப்பாடு இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பிரித்தானிய அரச குடும்பத்தில் இளவரசர் ஹரி மற்றும் மேகனின் பட்டங்கள் முழுமையாக நீக்கப்படுமா? எனவும் கேள்வியெழுந்துள்ளது.
நீண்ட காலமாக 'மெலிந்த' அரச குடும்பம் வேண்டும் என்று எதிர்பார்க்கும் மன்னர் மூன்றாம் சார்லஸ் இதேபோன்ற நடவடிக்கை எடுப்பாரா எனவும் ஐயம் எழுந்துள்ளது.